மதுரை கதை முடித்து சென்னைக்கு எச்சரிக்கை மணி அடித்த இயற்கை.. வேலையை காட்டும் பருவநிலை மாற்றம்

Update: 2024-10-22 05:29 GMT

மாறி வரும் காலநிலை சூழலால், தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி வரும் மழையில்.. ஆட்டம் கண்டிருக்கிறது மதுரை...

வட கடலோர மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கொட்டித் தீர்த்த கன மழையால் தூங்கா நகரமான மதுரை திக்கு முக்காடி போயிருக்கிறது...

இரவில் விடாது பெய்த மழை, பகலிலும் தொடர்ந்த நிலையில்,

மதுரை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது...

மதுரை அண்ணா பேருந்து நிலையம், அண்ணா நகர், மாட்டுத்தாவணி தெப்பக்குளம், மதுரை வைகை ஆற்று தரைப்பாலம் என வெள்ள நீர் சுற்றி வளைத்து சூழ... கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்...

இதன் மூலம் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னைக்கு மட்டுமல்ல.. தங்களுக்கும் தேவை என மதுரை வாசிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்