"அதெல்லாம் முடியாது".. அதிகாரிகளை ரவுண்டு கட்டிய மக்கள்.. மானாமதுரை அருகே பரபரப்பு

Update: 2024-08-25 13:58 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்குறிச்சி கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் குடியிருப்புக்காக மாற்றி விற்பனை செய்துள்ளது. இதையடுத்து நிலத்தை வாங்கியவர்கள் நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகளுடன் சென்றபோது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்