பொங்கல் கேட்ட கணவர்.. இட்லி வாங்கி கொடுத்த மனைவி - கணவன் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் மதுரை

Update: 2024-07-25 16:43 GMT

மதுரை, தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 64 வயது முதியவரான இவருக்கு பாண்டிசெல்வி என்பவருடன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், வயது மூப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சண்முக சுந்தரம், வீட்டிலே முடங்கி ஓய்வு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி சாப்பிட பொங்கல் வாங்கி வருமாறு தன் மனைவியிடம் முதியவர் கூறியிருக்கிறார். ஆனால், சண்முக சுந்தரத்தின் மனைவி பாண்டி செல்வி, இட்லி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு த*கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, முதியவரை மீட்டு குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்