``ஒற்றை மனு..! யார் அவர்..?'' பரபரத்த கோர்ட்... திருச்சி கமிஷனருக்கு பறந்த உத்தரவு

Update: 2024-06-26 15:32 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகமான பக்தர்களை அனுமதித்தால் நெரிசல் ஏற்படுவதாகவும், பக்தர்களின் கூட்டத்தை நெறிபடுத்துவதற்கே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர். நீதிமன்றம் அனைத்திற்கும் உத்தரவிட இயலாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற பொதுநல மனுக்கள் ஏன் தாக்கல் செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரரின் உள்நோக்கம் குறித்தும், அவரது பின்புலம் குறித்தும், அவர் எந்த அமைப்பையும் சேர்ந்தவரா என்பது குறித்தும் திருச்சி மாநகர் ஆணையர் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்