1 வயது குழந்தையுடன் மருந்து வாங்க வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. சிசிடிவியில் சிக்கிய பெண்கள்

Update: 2024-10-26 07:05 GMT

1 வயது குழந்தையுடன் மருந்து வாங்க வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. சிசிடிவியில் சிக்கிய பெண்கள்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தலிப்பரம்பு பகுதியில் மருந்துக் கடை ஒன்றிற்கு தாய் தனது ஒரு வயது குழந்தையுடன் மருந்து வாங்க வந்துள்ளார். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனது . இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மருந்து கடையின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. மருந்து கடைக்கு வந்த இரண்டு பெண்கள், மருந்து வாங்குவது போல நடித்து, குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. தற்போது, திருட்டில் ஈடுபட்ட பெண்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்