நண்பனோடு சேர்ந்து அரசு பஸ் டிரைவர் வீட்டில் செய்த பகீர் காரியம்

Update: 2024-09-17 09:34 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, வீட்டில் சாராயம் காய்ச்சிய அரசுப் பேருந்து ஓட்டுநர் உட்பட இருவரை போலீசார் ​கைது செய்தனர்.கருங்கல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், தனது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது செல்வகுமார், தனது நண்பரான அரசுப் பேருந்து ஓட்டுநர் ஷாம் ராஜ்குமாருடன் சேர்ந்து சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் சுற்றிவளைத்த போலீசார், காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 60 லிட்டர் சாராய ஊறல், இரண்டு பாட்டில் சாராயம் மற்றும் சாரயம் காய்ச்ச பயன்படுத்திய கேஸ் அடுப்பு மற்றும் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்