கத்தார், எகிப்தின் சீஸ்ஃபையர் முயற்சி.. உள்ளுக்குள்ளே வெடித்த இஸ்ரேல்

Update: 2024-08-19 05:12 GMT

காசாவுடனான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஒத்துழைப்பு அளிக்க கோரி அந்நாட்டின் டெல்

அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகள் ஏந்தியபடி தீயிட்டு கொளுத்தி

முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், ஹமாஸ் பிடியிலில்

உள்ள எஞ்சிய இஸ்ரேலியர்களை மீட்க வேண்டும்

என்று கோரிக்கை விடுத்தனர். அமெரிக்கா,

கத்தார், எகிப்து நாடுகளின் முயற்சியால் தோகாவில்

அடுத்த வாரம் மீண்டும் காசா போர்நிறுத்தம் தொடர்பான

பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதை தடுக்கும்

வகையில் இஸ்ரேல் நிபந்தனைகள் விதிப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு

ஏற்படாவிட்டால் இஸ்ரேலில் அரசுக்கு எதிரான

எதிர்ப்புகள் வலுக்கும் என்று போராட்டத்தில்

ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்