டெல்லியில் நாளை கொடியேற்ற போவது யார்? - கடைசி நேரத்தில் வந்த பெரும் சிக்கல்

Update: 2024-08-14 05:02 GMT

டெல்லியில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டை நியமித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ளதால் சுதந்திர தின விழாவில் யார் கொடி ஏற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. டெல்லி நிதியமைச்சர் அதிஷி கொடியேற்ற கெஜ்ரிவால் பரிந்துரை செய்திருந்தார். ஆனால், சிறையிலிருக்கும் அவர் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என பொது நிர்வாகதுறை தெரிவித்தது. இந்நிலையில், டெல்லி மாநில உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டை கொடியேற்ற நியமித்து துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்