மின்னல் வேகத்தில் அந்தரத்தில் பறந்து நொறுங்கிய கார் - நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2024-10-21 14:12 GMT

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், தடுப்புச்சுவரில் மோதி, பறந்து உருண்டு சாலையின் மறுபக்கம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காரில் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞர் லேசாக கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி, பறந்து சென்று மறுபுறம் உள்ள சாலையில் உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்