காலை சென்னையில் டீ... மதியம் நாகர்கோயிலில் சாப்பாடு - இனி அரை நாளில் மின்னல் வேக பயணம்

Update: 2024-08-28 04:42 GMT

சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையே நிரந்தரமாக வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் காலை 5.00 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மதியம் 1:50 மணிக்கு நாகர்கோயில் அடையும் என்றும் மீண்டும் நாகர்கோயிலில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 கோச்சுகளுடன் வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்