பள்ளிகளுக்கு வந்த அறிவிப்பு - புது சர்ச்சையா?

Update: 2024-10-04 06:03 GMT

பள்ளிகளில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்...

'பிஎம் ஸ்ரீ' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் வரும் அக்டோபர் 7 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் 'ஒரு தேசம் ஒரு தேர்தல்', 'விக்‌ஷ்த் பாரத்' போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றும், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்கு எனவும் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்... இந்த முடிவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், ஆசிரியர்களும் மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்