மதுரை விவசாயிகள் தலையில் விழுந்த பேரிடி - வேதனையில் குமுறும் காட்சிகள்

Update: 2024-10-04 08:11 GMT

மதுரை மாவட்டம் குலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், திடீரென கருக தொடங்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காலநிலை மாற்றம், பூச்சிகள் தாக்குதல், ஆகாயத் தாமரை உள்ளிட்டவையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எந்த உதவியும் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்