கோவையை அதிரவிட்ட கணவன்,மனைவி.. கோவையை அதிரவிட்ட கணவன்,மனைவி

Update: 2024-10-04 08:02 GMT

கோவை பூ மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தமிழ்பாண்டியனுக்கு வீரகேரளத்தைச் சேர்ந்த விஜயகுமார், பிரியதர்ஷினி தம்பதி அடிக்கடி பூஜை பொருட்களை வாங்கியபோது அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் தங்களுக்குச் சொந்தமான கடைகளில் இருந்து அதிக வருமானம் கிடைப்பதாகவும், அதில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும் தமிழ் பாண்டியனிடம் கூறியுள்ளனர். அதனை நம்பிய தமிழ்பாண்டியன் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதற்குரிய லாபத்தொகையை தமிழ்பாண்டியனிடம் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அவர் மூலமாக அவருடைய நண்பர்கள் 10 பேர், மொத்தம் ஒரு கோடியே 2 லட்ச ரூபாய் முதலீடு செய்தனர். அவர்களுக்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே லாபத்தொகை கொடுக்கப்பட்டது. அவர்கள் விசாரித்தபோதுதான் தாங்கள் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்பாண்டியன் அளித்த புகாரின் பேரில், விஜயகுமார், பிரியதர்ஷினி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்