பேக்கரி ஊழியர்கள் மீது தாக்குதல்.. பெண்களையும் அடித்த கொடூரம்.. அதிர வைத்த காரணம்.. பகீர் காட்சி

Update: 2024-09-22 14:36 GMT

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பேக்கரியில் கேக் சரி இல்லை என கூறி கடை ஊழியர்கள் மீது போதை இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரும்பூர் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள பேக்கரியில், நேற்று முன்தினம் இரவு, ஆம்பூர் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேக் வாங்க வந்துள்ளனர். அப்போது, கேக் சரியில்லை என கூறி, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியததில், போதையில் இருந்த இளைஞர்கள், கடையில் இருந்த பெண்கள் உள்பட 3 ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். காயமடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். தாக்குதல் தொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்