ஆந்திர மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளி முதல்வர் ராமேஸ்வரத்தில் கைது

ஆந்திராவில் டிசி கொடுத்ததால் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பள்ளி முதல்வர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-27 16:37 GMT
ஆந்திராவில் டிசி கொடுத்ததால் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பள்ளி முதல்வர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தூர் மாவட்டம் , பலமநேரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பில் மிஸ்பா மற்றும் அவருடைய தோழி பூஜிதா படித்து வந்தனர். இதனிடையே, பூஜிதாவை விட மிஸ்பா நன்கு படித்ததால், பூஜிதாவின் தந்தை மிஸ்பாவை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய பள்ளி முதல்வரை கேட்டுள்ளார். அதன்படி மாணவி மிஸ்பாவுக்கு முதல்வர் ரமேஷ் டிசி கொடுத்து அனுப்பியுள்ளார். மேலும், அனைவர் முன்பும் மிஸ்பாவை பள்ளி முதல்வர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மிஸ்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் உறவினர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி முதல்வர் ரமேஷை போலீசார் தேடிவந்த நிலையில் ராமேஸ்வரத்தில் வைத்து தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்