குழந்தைகள் விளையாடும் இடத்தில் கண்ணுக்கே தெரியாத எமன்.. வைரலாகும் வீடியோ

Update: 2024-09-30 03:52 GMT

காரைக்கால் கடற்கரையில் கடந்த 3 நாட்களாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலா தின விழா நடைபெற்று வருகிறது. அங்கு குழந்தைகள் விளையாடும் பகுதியில் மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், சரியாக பராமரிக்காத காரணத்தால் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெருமாள் என்ற எலக்ட்ரீசியன் டெஸ்டரை வைத்து ஆய்வு செய்து, அதில் மின்கசிவு ஏற்படுவதை உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்