வீடு புகுந்து குடும்பத்தையே தாக்கிய நபர்.. பதைபதைக்க வைக்கும் காட்சி

Update: 2024-09-30 03:49 GMT

வீட்டருகே கழிவுநீர் வாய்க்கால் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இரு வீட்டாரும் கண்மூடித்தனமாக தாக்கி மோதிக்கொள்ளும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், காந்திநகரில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்காலால், குமரசேன் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில், குமரேசன், செந்தில்குமாரின் வீட்டிற்குள் புகுந்து அவரின் குடும்பத்தாரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்