தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அம்பாள் சன்னதி வரை இருசக்கர வாகனத்தில் சென்ற நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ராஜகோபுர நுழைவு வாயிலை தாண்டி, கொடி மரம் வழியாக லுங்கி அணிந்தபடி ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்வதை பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். சாலையில் நிறுத்த வேண்டிய வாகனத்ததை, கொடிமரம் வரை செல்ல அனுமதி வழங்கிய கோயில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.