நெல்லையில் பயங்கரம்.. குளிக்க சென்ற இடத்தில் ரத்த ஆறு.. போதையில் அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்

Update: 2024-09-30 04:06 GMT

நெல்லை மாவட்டம் பணகுடியில், இரு தரப்பு இளைஞர்கள் மதுபோதையில் ஒருவரையொருவர் அரிவாளால் வெட்டி மோதிக்கொண்ட சம்பவத்தில், 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கன்னிமாறான் தோப்பு ஓடைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, தருமபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும் தனது நண்பர்களுடன் அங்கு குளிக்க வந்த நிலையில், இரு தரப்பினருக்கிடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், இரு தரப்பும் ஒருவரையொருவர் அரிவாளால் தாக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மூன்று பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவம் குறித்தான விசாரணையை கையிலெடுத்திருக்கும் போலீசார், இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்