முதன்முறையாக சிஎஸ்கே பயிற்சி அகாடமி.. மதுரை இளைஞர்களுக்கு IPL-ல் விளையாட அரிய வாய்ப்பு

Update: 2024-09-06 04:43 GMT

மதுரையில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை முன்னாள் இந்திய அணி வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார்.

ஐபிஎல்லில் பிரபல அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாட்டில் 12வது மையமாக மதுரை மாவட்டம் சோழவந்தான் நகரிகல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் புதிய அகாடமியை தொடங்கியுள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார். இந்த மையத்தில் ஆறு வயது முதல் 23 வயது வரை உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் பயிற்சி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள் திறமையை மேம்படுத்த உலகத்தர வசதிகள் உள்ளதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்