மதராஸக்கள் அங்கீகார விவகாரம்... ``தடை?'' - சுப்ரீம் கோர்ட் அதிரடி

Update: 2024-10-21 14:25 GMT

ஆர்.டி.ஐயை அமல்படுத்தாத மதராஸக்களுக்கான அங்கீகாரத்தை திரும்ப பெற அறிவுறுத்திய என்.சி.பி.சி.ஆரின் உத்தரவை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத மதராஸக்களுக்கான அங்கீகாரத்தை திரும்ப பெற,

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜமியத்- உலேமா- ஏ- ஹிந்த் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இது தொடர்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஜூலை 10ஆம் தேதி உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த மனுவுக்கு பதில் அளிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்