"ஆபரேஷன் கங்கா மூலம் மீட்கப்பட்ட மாணவர்கள் படிப்பை முடிக்க மத்திய அரசு உதவி" - மத்திய கல்வி அமைச்சர் உறுதி

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை முடிக்க மத்திய அரசு உதவி செய்யும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.

Update: 2022-03-14 15:02 GMT
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை முடிக்க மத்திய அரசு உதவி செய்யும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மாணவர்கள் மீட்கப்பட்டது, 130 கோடி இந்தியர்களின் கூட்டு அறிவுக்கான சான்று என குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் மாணவர்களை அதிர்ச்சியிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான நேரம் இது என குறிப்பிட்ட அவர், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் மாணவர்கள் மருத்துவர் ஆவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது குறித்து அரசு சிந்தித்து வருவதாக மாணவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உக்ரைனில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட மாணவர்கள் தங்களது கல்வியை முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்