தமிழக போலீஸ் திடீர் அதிரடி... பரபரக்கும் புதுச்சேரி எல்லை

Update: 2024-10-02 07:21 GMT

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கீழே கொட்டி அழித்தனர். காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவது வழக்கம். இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து மது வகைகளை வாங்கி பதுக்கி வைக்க மதுப்பிரியர்கள் முயன்ற நிலையில், கடலூர் எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் சாலையில் ஊற்றி அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்