சர்வீஸ்க்கு வந்த காரை ஓட்டிச் சென்ற ஊழியர்.. அடுத்த நொடி பற்றி எரிந்த பயங்கரம்..

Update: 2024-10-02 06:56 GMT

கேரள மாநிலம் கண்ணூரில் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. பழுது நீக்குவதற்காக சர்வீஸ் சென்டரில் விடப்பட்டிருந்த காரை, சர்வீஸ் சென்டர் ஊழியர் அருகில் இருந்த வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, திடீரென காரின் முன்பகுதியில் கரும்புகை வெளியேற, உடனடியாக கீழே இறங்கியுள்ளார். பின்னர், கார் தீப்பிடித்து மளமளவென எரிந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்