மகனை அரசுப் பள்ளியில் சேர்த்த கல்வித் துறை இயக்குநர் - குவியும் பாராட்டுக்கள்

புதுச்சேரி கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு தனது மகனை அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Update: 2022-03-14 10:55 GMT
புதுச்சேரி கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு தனது மகனை அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. புதுவையில் கொரோனா பரவல் குறைந்ததால் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு, அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது மகன் அசு கோஸை லாஸ்பேட்டையில் உள்ள கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலை பள்ளியில் இன்று எல்கேஜி வகுப்பில் சேர்த்தார். அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்த கல்வித்துறை இயக்குனருக்கு பலரும் பராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்