பாய்மரப்படகில் 1,700 கி.மீ. தூரம் பயணம் - பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பான வரவேற்பு

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வரை, முதல் முறையாக பாய்மரப்படகில் பயணம் செய்த பெண் இராணுவ அதிகாரிகள், வெற்றிகரமாக மீண்டும் சென்னை திரும்பினர்.

Update: 2022-02-23 10:09 GMT
சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வரை, முதல் முறையாக பாய்மரப்படகில் பயணம் செய்த பெண் இராணுவ அதிகாரிகள், வெற்றிகரமாக மீண்டும் சென்னை திரும்பினர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் கடந்த 15 ஆம் தேதி, இந்த பயணத்தை தொடங்கி வைத்தார். ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பயணத்தை, 10 பேர் அடங்கிய பெண் இராணுவ அதிகாரிகள் குழு, 8 நாட்களில் முடித்து, வெற்றிகரமாக இன்று காலை சென்னை துறைமுகம் திரும்பியது. அவர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்