வாணியம்பாடி அருகே அரசு பேருந்து நிற்காமல் சென்றதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத பள்ளி மாணவி ஓடிச்சென்று பேருந்தில் ஏறிய விவகாரத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் இயக்கிய அரசு ஓட்டுநர் முனிராஜ், நடத்துனர் அசோக் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.