கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக சாலையில் திடீரென 3 குழிகள் ஏற்பட்டது. இந்த மூன்று குழிகளும் 7 அடி அளவிலான அளவில் இருப்பதால் மாநகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாக்கடை குழாய் நீர் கசிவு ஏற்பட்டதால் இந்த குழிகள் ஏற்பட்டதாக vமாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட குழிகளால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.