`நிலா அது வானத்து மேலே..’ - கையில் சரக்குடன் பரிசல் பயணம்.. வைரல் வீடியோ
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மது அருந்தியபடியே பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளின் வீடியோ வெளியாகி உள்ளது. கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் பரிசல் ஓட்டிகள், மது அருந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விதிமீறி செயல்படும் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மீது மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.