ஆஜர் ஆகாத கலெக்டர் - அதிரடி வாரண்ட்.. ஹைகோர்ட் உத்தரவு

Update: 2025-03-22 13:35 GMT

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு வாரண்ட்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜர் ஆகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட்

மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைகுன்றம் கிராமத்தில், கிராம உதவியாளராக பணியாற்றிய முனுசாமி என்பவர் 2001ல் மரணம் அடைந்தார்

முனுசாமியின் மகன் ராஜகிரி, கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்

3 மாதங்களில் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என 2023, டிசம்பரில் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என 2024ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார், ராஜகிரி

Tags:    

மேலும் செய்திகள்