வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி - ரூ.90,020 பறிகொடுத்த இளைஞர்

சென்னையில் வங்கி இருந்து பேசுவதாக கூறி, இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 20 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-30 01:44 GMT

சென்னையில் வங்கி இருந்து பேசுவதாக கூறி, இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 20 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் வங்கி கணக்கு தொடர்பாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. ராஜேஷ் அதனை என்வென்று, பார்த்த சில நிமிடங்களில், வங்கியில் இருந்து பேசுவதாக மர்மநபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், சில நிமிடங்களில், அவரது செல்பேனுக்கு வந்த ஓடிபி எண்ணை கூறுமாறு ஏமாற்றி 99 ஆயிரத்து 20 ரூபாயை ஆன்லைன் வாயிலாக கொள்ளையடித்துள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ், பணத்தை மீட்டு தருமாறு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்