#BREAKING || 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்

Update: 2024-09-07 11:58 GMT

திருமணம் செய்துக் கொள்வதாக கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கடலூர் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2022 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உறவுக்கார சிறுமியிடம் நெருங்கி பழகிய கடலூரை சேர்ந்த திருமாறன், சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டார் என போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகளாக விசாரணை தொடர்ந்த வேளையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதம் விதித்தது. சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணமாக 4 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு பரிந்துரைத்தது

Tags:    

மேலும் செய்திகள்