ஏன்டா... ஹாரன் அடிச்சா வழி விட முடியாதா? அரசு பேருந்தை வழிமறித்து தகராறு செய்த இளைஞர்கள்....திருவாரூரில் பரபரப்பு

Update: 2023-07-16 12:45 GMT

நன்னிலம் அருகே, இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக்கூறி, அரசு பேருந்தை வழிமறித்த இளைஞர்கள், ஓட்டுநரை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலம் பனிமனையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து, அதம்பார் என்ற கிராமம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் பின்னால் வந்த 5 இளைஞர்கள் வழிவிடும்படி ஒலி எழுப்பியுள்ளனர். ஆனால் குறுகிய பாதை என்பதால் பேருந்து வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் முந்திச் சென்ற இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்