தகாத உறவில் தகராறு... பெண்ணை தீ வைத்து எரித்த இளைஞர்... திருப்பூரில் நடந்த பயங்கரம்

Update: 2023-03-02 02:36 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தகாத உறவில் ஏற்பட்ட பிரச்சினையில், பெண்ணை தீவைத்து எரித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம் அருகே வரதப்பம்பாளையத்தை சேர்ந்த பிரேமாவிற்கு, 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பிரேமாவிற்கு நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த விஜய் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. வழக்கம்போல் பிரேமா வீட்டிற்கு விஜய் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில், பிரேமா உடலில் தீ பற்றிய நிலையில், அலறித் துடித்தபடி கூச்சலிட்டுள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி பிரேமா உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விஜயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய விஜய் முடிவு செய்திருந்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பிரேமாவை தீவைத்து எரித்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்