தேவர் ஜெயந்தி விழா எதிரொலி - இளைஞர்களிடம் எதேச்சையாக சோதனை போட்ட போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Update: 2022-10-30 05:14 GMT

தேவர் ஜெயந்தி விழா எதிரொலி - இளைஞர்களிடம் எதேச்சையாக சோதனை போட்ட போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கியுடன் 2 பேர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடுவதை முன்னிட்டு நள்ளிரவு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அமர்ந்திருந்த 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் துப்பாக்கி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எதற்காக துப்பாக்கி எடுத்து வந்தார்கள் என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்