மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு... மாற்றுத் திறனாளி வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் மாற்றுத் திறனாளி வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-29 08:59 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் என்பவரை பொய் புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளார். கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், 2020 மார்ச் 10ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் முதுகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்