தாய்லாந்தில் இப்படி ஒரு மாரியம்மன் கோயிலா! அந்நாட்டு மக்களையே வியக்க விட்ட தமிழர்கள்

Update: 2024-10-13 04:11 GMT

#temple | #thailand

தாய்லாந்தில் இப்படி ஒரு மாரியம்மன் கோயிலா! அந்நாட்டு மக்களையே வியக்க விட்ட தமிழர்கள்

தாய்லாந்தில் உள்ள மகாமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் பிரசித்தி பெற்ற சுமார் 200 ஆண்டுகள் பழமையான மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமியையொட்டி அம்மன் தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் மகா மாரியம்மன், முருகன், காத்தவராயன் உள்ளிட்ட சுவாமிகள் வீதி உலா வந்தனர். மேள, தாளங்கள் முழங்க கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவில், தாய்லாந்து மக்கள், சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனமுருக வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்