பதவியேற்ற மறுநாளே மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த காஷ்மீர் முதல்வர்

Update: 2024-10-18 09:23 GMT

ஜம்மு கஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அங்கு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஒமர் அப்துல்லா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் ஒமர் அப்துல்லா தலைமையில் நேற்று மாலை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் அமைச்சரவை கூட்டம்

நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓரிரு நாட்களில் இது தொடர்பான வரைவு தீர்மானத்தை, முதல்வர் ஒமர் அப்துல்லா, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வழங்குவார் என அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்