"ஈரானை அடித்து சுக்குநூறாக்கி விடுவேன்" - உலகை அதிரவைத்த எச்சரிக்கை

Update: 2024-09-26 13:18 GMT

குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் தேர்தலில் களமிறங்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது 2 முறை படுகொலை முயற்சிகள் நிகழ்த்தப்பட்டன.

இதற்குப் பின்னால் ஈரான் இருப்பதாக சந்தேகிக்கும் ட்ரம்ப், "நான் மட்டும் அதிபராக இருந்து மற்றொரு நாடு இதேபோல் அதிபர் வேட்பாளரை அச்சுறுத்தியிருந்தால் அந்த நாட்டை அடித்து நொறுக்கியிருப்பேன்" என எச்சரித்துள்ளார்.

ஈரான் ட்ரம்ப்பை படுகொலை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ட்ரம்ப் வடகரோலினாவில் நடந்த தனது பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்