ஈவு இரக்கம் இன்றி கொடூரமாக தாக்கும் இஸ்ரேல்... ரத்தக்களறியான லெபனான்..

Update: 2024-09-26 03:35 GMT

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 51 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்துள்ளார். லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அ மைப்பின் நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 50 குழந்தைகள், 94 பெண்கள் உள்பட 550-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்துள்ளார் 233 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, லெபனானில், போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அ ந்நாட்டில் வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்