கச்சத்தீவில் இந்திய- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை

கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2022-03-12 02:24 GMT
கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அங்குள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்ற இந்தியா, இலங்கை மீனவர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், கச்சத் தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தடையை நீக்க வேண்டும், இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளை விடுவிக்க வேண்டும் என இந்திய மீனவர்கள் வலியுறுத்தினர். தொப்புள்கொடி உறவுகளான, இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க ஆட்சேபனை இல்லை எனக் கூறிய இலங்கை மீனவர்கள், இரட்டை மடி வலை பயன்பாட்டால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக கூறினர். இந்த விவகாரத்தில், விரைவில் முடிவு எடுக்கப்படும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்