"தந்தி டிவி செய்தி எதிரொலி" - இடியும் நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றம்

Update: 2024-10-11 02:21 GMT

வேலூர் அருகே இடிந்து விழும் நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குறித்து தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில், அசம்பாவிதம் ஏற்படும் முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டது.

ராமாபுரம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளிக்கு அருகே சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் தூண்கள் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. தற்போது, மழைக்காலம் தொடங்கியதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி உத்தரவின் பேரில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்