நடுவழியில் அப்படியே நின்ற கார்... சுற்றி வளைத்த போலீஸ் - வேலூரில் பரபரப்பு

Update: 2024-10-05 04:02 GMT

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் போலீசார் வாகன தணிக்கையின் போது, காரை நடுவழியில் நிறுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் பூங்கா எதிரே உள்ள கோட்டை சுற்றுச்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரை நிறுத்தி ஆவணங்களை கேட்டபோது போலீசாருக்கும், காரில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காரின் ஆவணங்கள் செல்போனில் இருப்பதாக கூறிய அவர் காரை நடுவழியில் நிறுத்திவிட்டு இறங்கினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்