திருப்பூரையே உலுக்கிய வெடி விபத்து... நொடியில் அதிர்ந்த 25 வீடுகள்...சிதறிய உடல்கள்..வீதியில் மக்கள்

Update: 2024-10-10 07:44 GMT

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் வெடி விபத்தில் கைதான இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். பாண்டியன் நகர் பகுதியில் கார்த்திக் என்பவரது வீட்டில் திருவிழாவுக்கான பட்டாசு தயாரிக்கும் போது நேர்ந்த வெடி விபத்தில் 2 குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, கட்டிட உரிமையாளர் கார்த்திக் மற்றும் நாட்டு வெடி கடை வைத்துள்ள சரவணக்குமாரை 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்