"ஆசை ஆசையாக இருந்தோம்" - கிடைத்த ஏமாற்றம் - கவலையில் சென்னை மக்கள்

Update: 2024-07-17 08:19 GMT

ஆசை ஆசையாக இருந்தோம்" - கிடைத்த ஏமாற்றம் - கவலையில் சென்னை மக்கள்

சென்னை அமைந்தகரை பகுதியில் மோசமாக காணப்படும் சாலையால் அன்றாடம் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். சென்னை, அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட 101வது வார்டில் அமைந்தகரை மஞ்சக்கொல்லை தெரு பகுதி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் குண்டும் குழியுமாக விபத்து ஏற்படும் வகையில் சாலை காட்சியளிக்கிறது. மழையால் சேறும் சகதியுமாக சாலை மாறியுள்ளது. இந்நிலையில், சாலை அமைத்துத் தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்