Break பிடிக்காமல் சீறி பாய்ந்த Bus - பாதியில் குதித்த பயணிகள்... வெளியான பரபரப்பு காட்சி

Update: 2024-07-04 09:05 GMT

பஞ்சாப் மாநிலத்தில் அமர்நாத் யாத்ரிகர்களுடன் சென்ற பேருந்தில் திடீரென பிரேக் பழுதானதால் 10 பேர் காயமடைந்தனர். அந்தப் பேருந்தில் சுமார் 40 யாத்ரிகர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, பிரேக் பழுதானது. ஓட்டுநரால் நிறுத்த முடியாத சூழலில், பயணிகள் சிலர், ஓடும் பேருந்தில் இருந்து அவசரமாக வெளியே குதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார், துரிதமாக செயல்பட்டு, பேருந்து சக்கரத்தில் கற்களை வைத்ததால் பேருந்தின் வேகம் குறைந்து பின்னர் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்