குடிபோதையில் கொடூரனாக மாறிய நண்பன்..உயிர் நண்பனுக்கு கட்டிய பாடை..| Tiruvallur

Update: 2024-10-09 14:32 GMT

செங்குன்றம் காமராஜர் நகர் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் நண்பர்கள் கூட்டாக வசித்து வந்துள்ளனர். இதில், சம்பவத்தன்று ஒன்றாக மது அருந்திய போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, திருவாரூரை சேர்ந்த விவகானந்தனை, லிங்குசாமி என்பவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், பகலில் மர்மமான முறையில் வீட்டிற்குள் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விவேகானந்தன், அன்றிரவு தூங்கும் போது அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சம்பவம் குறித்தான விசாரணையை கையிலெடுத்திருக்கும் போலீசார், விவேகானந்துடன் சம்பவத்தன்று இரவு அறையில் இருந்த லிங்குசாமி உட்பட இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்