`தொடர்ந்து 9ஆவது முறை' பள்ளியின் முன்குவிந்த பெற்றோர்கள் - மதுரையில் பரபரப்பு

Update: 2024-10-10 10:47 GMT

`தொடர்ந்து 9ஆவது முறை' பள்ளியின் முன்குவிந்த பெற்றோர்கள் - மதுரையில் பரபரப்பு

கடந்த இரண்டு வாரங்களில், மதுரை மாவட்டத்தில் 8 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனைகளுக்கு பின் அவை புரளி என தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மாவட்டத்தில் 9ஆவது முறையாக, மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி ஸ்கூல் மற்றும் கேம்பிரிட்ஜ் பள்ளி ஆகிய 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு பள்ளிகளிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் எந்த

வெடிப்பொருட்களும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஏராளமான பெற்றோர்கள் பள்ளியின் முன்பாக குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்