மாணவிகள் தலையில் இடியை இறக்கிய நோட்டீஸ்... பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு

Update: 2024-09-30 16:53 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் முதன்மைச் சாலை பகுதியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென நிர்வாக காரணங்களால் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் பள்ளி மூடப்படும் என அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்படது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும் என கூறி பெற்றோர் மற்றும் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்