ஒரே நேரத்தில் கோவையைவிட்டு வெளியேறிய வடமாநிலத்தவர் பரபரப்பில் ஸ்தம்பித்த ரயில் நிலையம்

Update: 2024-10-05 07:43 GMT

தசரா பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, கோவை ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், லட்சக் கணக்கான வட மாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தசரா பண்டிகையை கொண்டாடுவதற்காக, வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல குடும்பத்துடன் கோவை ரயில் நிலையத்தில் குவிந்ததால், கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சொந்த ஊர் செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்